- TNPSC Group 4 Exam Questions 2024
TNPSC Group 4 Exam Questions 2024

பகுதி அ (Q51 – Q60)
51. “தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன்” என்று போற்றப்படுபவர்.
(A) சச்சிதானந்தன்
(B) ஆறுமுகநாவலர்
(C) சி. வை. தாமோதரனார்
(D) உ. வே. சாமினாதர்
(E) விடை தெரியவில்லை
விடை: C
Read More: TNPSC Group 4 Questions 2024 பகுதி அ (Q41-Q50)
52. கூற்று 1: மாநகராட்சிக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் இராஜாஜி.
கூற்று 2: அக்கூட்டத்தில் “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று ம.பொ.சி. முழங்கினார்.
(A) கூற்று 1 மட்டும் சரி
(B) கூற்று 2 மட்டும்
(C) கூற்று 1ம் கூற்று 2ம் சரி
(D) இரு கூற்றுகளும் தவறு
(E) விடை தெரியவில்லை
விடை: B
53. திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் “திருவள்ளுவர் தவச்சாலையை” அமைத்தவர்.
(A) தேவநேயப்பாவாணர்
(B) இரா. இளங்குமரனார்
(C) ம. பொ. சிவஞானம்
(D) காயிதே மில்லத்
(E) விடை தெரியவில்லை
விடை: B
54. இராசராச சோழனுக்கு கோவில் கட்டவேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டிய கோயில் எது?
(A) இராமேஸ்வரம் கோயில்
(B) பல்வை குடைவரைக் கோயில்
(C) மதுரை மீனாட்சி கோயில்
(D) இராச்சிம்மேச்சுரம் கோயில்
(E) விடை தெரியவில்லை
விடை: D
55. குத்தி தின்றால் கரையும் என்னும் பழமொழி உணர்த்தும் பொருளை எழுது.
(A) பயன்றற சொல்
(B) உழைக்காதவன் செல்வம் அழியும்
(C) எளிதில் மனதில் பதித்தல்
(D) தற்செயல் நிகழ்வு
(E) விடை தெரியவில்லை
விடை: B
56. அகர வரிசைப்படுத்துக.
இசைக் கருவிகளின் பெயர்களை அகர வரிசைப்படுத்துக.
படகம், தவில், கணப்பறை, உடுக்கை, நாகசுரம், மகுடி.
(A) தவில், படகம், கணப்பறை, நாகசுரம், மகுடி, உடுக்கை
(B) உடுக்கை, கணப்பறை, தவில், நாகசுரம், படகம், மகுடி
(C) படகம், உடுக்கை, மகுடி, நாகசுரம், கணப்பறை, தவில்
(D) நாகசுரம், கணப்பறை, உடுக்கை, தவில், மகுடி, படகம்
(E) விடை தெரியவில்லை
விடை: B
Read More: Best AI Tools for Exam Preparation in 2025
57. “மனக்குரங்கு” என்னும் சொல்லிற்கு இலக்கணக் குறிப்புத் தருக.
(A) உருவகம்
(B) வினையெச்சம்
(C) உவமைத்தொகை
(D) உரிச்சொற்றொடர்
(E) விடை தெரியவில்லை
விடை: A
58. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
(A) கடல்
(B) ஆழி
(C) பரவை
(D) ஆறு
(E) விடை தெரியவில்லை
விடை: D
59. பிழை திருத்தம் செய்க.
(A) மயில் அலறும் குயில் கூவும் ஆந்தை அகவும்
(B) மயில் அகவும் குயில் அலறும் ஆந்தை கூவும்
(C) மயில் அகவும் குயில் கூவும் ஆந்தை அலறும்
(D) மயில் கூவும் குயில் அலறும் ஆந்தை அகவும்
(E) விடை தெரியவில்லை
விடை: C
60. பிழை திருத்தம் செய்க.
(A) வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்
(B) வாழைப்பழ தோல் சறுக்கி ஏழை கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்
(C) வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான்
(D) வாழைப்பழத் தோல் சருக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான்
(E) விடை தெரியவில்லை
விடை: A
Read More: TNPSC Group 4 Questions 2024 பகுதி அ (Q31-Q40)
For Instant Alerts Join Our Telegram Channel: https://t.me/annaisamayalGovernmentjobalert
TNPSC Group 4 Exam Questions with Answers and Books all are available at
https://annaisamayal.com