- TNPSC Group 4 Questions 2024
TNPSC Group 4 Questions 2024

பகுதி அ (Q21-Q30)
21. திருக்குறளின் வழியில் துன்பப்படுபவர்.
(A) தீக்காயம் பட்டவர்
(B) தீயினால் சுட்டவர்
(C) பொருளைக் காக்காதவர்
(D) நாவைக் காக்காதவர்
(E)விடை தெரியவில்லை
விடை: D
Read More: TNPSC Group 4 Questions 2024 பகுதி அ (Q11-Q20)
22.
நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று.
இக்குறளில் இடம்பெற்றுள்ள அணி யாது?
(A) உவமையணி
(B) பிறிதுமொழிதல் அணி
(C) வேற்றுமையணி
(D) தன்மையணி
(E) விடை தெரியவில்லை
விடை: A
23. கீழ்க்கண்டவற்றில் ஒளவையார் இயற்றிய நூல்.
(A) வெற்றி வேற்கை
(B) அருங்கலச்செப்பு
(C) நன்னெறி
(D) ஞானக்குறள்
(E) விடை தெரியவில்லை
விடை: D
24. கரைபொரு – இலக்கண குறிப்பு வரைக.
(A) ஆறாம் வேற்றுமை தொகை
(B) இரண்டாம் வேற்றுமை தொகை
(C) உவமைத் தொகை
(D) பண்புத் தொகை
(E) விடை தெரியவில்லை
விடை: B
25. புறநானூற்றின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் யார்?
(A) திரு. கால்டுவெல்
(B) திரு. ஜி.யு. போப்
(C) திரு. வீரமாமுனிவர்
(D) திரு. சீகன்பால்கு
(E) விடை தெரியவில்லை
விடை: B
26. “வலவன் ஏவா வானூர்தி” – எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல்.
(A) அகநானூறு
(B) புறநானூறு
(C) ஐங்குறுநூறு
(D) குறுந்தொகை
(E) விடை தெரியவில்லை
விடை: B
27. புறநானூறு – இந்நூலை The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் மொழிப்பெயர்த்தவர்.
(A) டாக்டர். கால்டுவெல்
(B) திரு. ஜி.யு. போப்
(C) பெர்சிவல் பாதிரியார்
(D) ஜார்ஜ் எல். ஹார்ட்
(E) விடை தெரியவில்லை
விடை: D
28. கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி.
(A) அருளப்பன்
(B) யோவான்
(C) சந்தாசாகிப்
(D) சன்னியாசி
(E) விடை தெரியவில்லை
விடை: A
29. தேம்பாவனியின் பாட்டுடைத் தலைவன் யார்?
(A) இயேசு
(B) மரியாள்
(C) யூதாஸ்
(D) வளன்
(E) விடை தெரியவில்லை
விடை: D
30. முத்தொள்ளாயிரம் காட்டும் போர்க்களச் சிறப்புடைய நாடு.
(A) தொண்டை நாடு
(B) சேர நாடு
(C) பாண்டிய நாடு
(D) சோழ நாடு
(E) விடை தெரியவில்லை
விடை: D
Read More: TNPSC Group 5A Syllabus Tamil and English