ADVERTISEMENT

TNPSC Group-4 Questions and Answers

டி.என்.பி.எஸ்.சி.(TNPSC) குரூப் -4 தேர்வு

பொதுத்தமிழ் – இலக்கணம்

1. ‘ படிப்பித்தார் ‘ என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.

a . படித்த

b . படிப்பி

c . படித்தல்

d . படி

ADVERTISEMENT

e . விடை தெரியவில்லை

விடை: b

2. கயல்விழி என்பதன் இலக்கணக் குறிப்பு

a . வேற்றுமைத் தொகை

b . உவமைத்தொகை

ADVERTISEMENT

c . பண்புத் தொகை

d . உம்மைத் தொகை

e . விடை தெரியவில்லை

விடை: b

3. பொங்கல் உண்டோம் என்பது

ADVERTISEMENT

a . இடவாகு பெயர்

b . சினையாகு பெயர்

c . தொழிலாகு பெயர்

d . பொருளாகு பெயர்

e . விடை தெரியவில்லை

ADVERTISEMENT

விடை: c

4. ‘ டைஸ் ‘ என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்

a . மாதம்

b . நாள்

c . வாரம்

ADVERTISEMENT

d . ஆண்டு

e . விடை தெரியவில்லை

விடை: b

5. இவற்றுள் முற்றெச்சத்தை எடுத்து எழுதுக:

a . கண்ணன் உறங்கினான் விழித்தான்

ADVERTISEMENT

b . கண்ணன் விழித்து எழுந்தான்

c . கண்ணன் எழுந்து படித்தான்

d . கண்ணன் படித்து முடித்தான்

e . விடை தெரியவில்லை

விடை: a

ADVERTISEMENT

6. சொற்களை வரிசைப்படுத்தி மறைந்த பழமொழியினை கண்டறிக.

a . குப்பை துலங்க மேனி மேனி

b . மேனி குப்பை துலங்க மேனி

c . மேனி துலங்க குப்பை மேனி

d . துலங்க மேனி குப்பை மேனி

ADVERTISEMENT

e . விடை தெரியவில்லை

விடை: c

7. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்:

a . நீர்வழிப்படுஉம் ஆருயிர் முறைவழிப்படூஉம் புனைபோல்

b . ஆருயிர் முறைவழிப்படூஉம் நீர்வழிப்படுஉம் புனைபோல்

ADVERTISEMENT

c . முறைவழிப்படூஉம் ஆருயிர் புனைபோல் நீர்வழிப்படுஉம்

d . நீர்வழிப்படுஉம் புனைபோல் ஆருயிர் முறைவழிப்படுஉம்

e . விடை தெரியவில்லை

விடை: d

8. ” செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் ஆறும் தருவது வினையே ” – இதில் ‘ வினை ‘ என்னும் சொல் குறிப்பது

ADVERTISEMENT

a . தெரிநிலை வினைமுற்று

b . குறிப்பு வினைமுற்று

c . குறிப்புப் பெயரெச்சம்

d . வினைமுற்று

e . விடை தெரியவில்லை

ADVERTISEMENT

விடை: a

9. வழூஉச் சொல்லற்ற தொடர் எது?

a . வலது பக்கச் சுவரில் எழுதாதே

b . வலப்பக்கச் சுவரில் எழுதாதே

c . வலப்பக்கச் சுவற்றில் எழுதாதே

ADVERTISEMENT

d . வலது பக்கச் சுவற்றில் எழுதாதே

e . விடை தெரியவில்லை

விடை: b

10. கீழ்வருவனவற்றுள் பிழையில்லாச் சொற்றொடர் எது?

a . அவளது தந்தையும் எனது மகனும் கூறுவது எற்கத்தக்கது அல்ல

ADVERTISEMENT

b . அவள் தந்தையும் என் மகனும் கூறுவன ஏற்கத்தக்கன அல்ல

c . அவளின் தந்தையும் என் மகனும் கூறுவன ஏற்கத்தக்கது அன்று

d . அவள் தந்தையும் எனது மகனும் கூறுவது எற்கத்தக்கது அன்று

e . விடை தெரியவில்லை

விடை: b

ADVERTISEMENT

11. பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாத சொல்லைக் கண்டறிக: பண்புத் தொகை

a . நற்றிறம்

b . நன்மொழி

c . செம்மொழி

d . தேமொழி

ADVERTISEMENT

e . விடை தெரியவில்லை

விடை: d

12.பொதும்பர் – என்பதன் இலக்கணக் குறிப்பு – தேர்க:

a . உருவகம்

b . உம்மைத் தொகை

ADVERTISEMENT

c . ஈற்றுப் போலி

d . ஆகுபெயர்

e . விடை தெரியவில்லை

விடை: c

13. வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க:

ADVERTISEMENT

a . வெண்ணீர் தாவாரத்தில் ஓடியது

b . வெந்நீர் தாவாரத்தில் ஓடியது

c . வெந்நீர் தாழ்வாரத்தில் ஓடியது

d . வெண்ணீர் தாழ்வாரத்தில் ஓடியது

e . விடை தெரியவில்லை

ADVERTISEMENT

விடை: c

14. பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக:

a . முருகன் சிலப்பதிகாரத்தைப் படித்தான் b . முருகன் சிலப்பதிகாரத்தைப் படிப்பித்தான்

c . சிலப்பதிகாரம் முருகனால் படிக்கப்பட்டது

d . சிலப்பதிகாரத்தைப் படித்தவன் முருகன் e . விடை தெரியவில்லை

ADVERTISEMENT

விடை: b

15. உழூஉச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க:

a . ஒருத்தி புட்டு வித்து சிலவு செய்தாள்

b . ஒருத்தி புட்டு விற்று செலவு செய்தாள் c . ஒருத்தி பிட்டு வித்து சிலவு செய்தாள்

d . ஒருத்தி பிட்டு விற்றுச் செலவு செய்தாள் e . விடை தெரியவில்லை

ADVERTISEMENT

விடை: d

மேலும் படிக்கTNPSC Group-4 Questions and Answers

16. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:

a . யாமம் , யாப்பு , யாணர் , யவனர்

b . யவனர் , யாணர் , யாப்பு , யாமம்

ADVERTISEMENT

c . யாணர் , யவனர் , யாமம் , யாப்பு

d . யாப்பு , யாமம் , யவனர் , யாணர்

e . விடை தெரியவில்லை

விடை: b

17. கீழ்க்காணும் பாடலிலிருந்து எடுக்கப்பட்ட சொற்களுள் எது எதிர்ச்சொல் இல்லை?

ADVERTISEMENT

” நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப் போல் காணுமே – அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் ஈந்த உபகாரம் நீர்மேல் எழுத்திற்கு நேர் ”

a . நல்லார் x தீயார்

b . உபகாரம் × உபத்திரவம்

c . ஈரம் x காய்ந்த

d . காணுமே x காணாதே

ADVERTISEMENT

e . விடை தெரியவில்லை

விடை: c

18. ‘ வீ என்ற ஓரெழுத்து ஒருமொழி குறிக்காத பொருள்.

a . காற்று

b . மலர்

ADVERTISEMENT

c . கொல்

d . பறவை

e . விடை தெரியவில்லை

விடை: a

19. வாக்கியங்களைக் கவனி:

ADVERTISEMENT

கூற்று ( A ) : அனைவரும் தாய்மொழியைப் போற்றுக

காரணம் ( R ) : விழைவு , வேண்டுதல் , வாழ்த்தல் , வைதல் ஆகியவற்றுள் ஒன்றைத் தெரிவிக்கும் வாக்கியம் வியங்கோள் வாக்கியம்

இவற்றுள்:

a . A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது A விற்கு சரியான விளக்கமல்ல

b . A சரி. ஆனால் R தவறு

ADVERTISEMENT

c . A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது A விற்கு சரியான விளக்கம்

d . A தவறு, ஆனால் R சரி

e . விடை தெரியவில்லை

விடை: c

20. பெயர்ச்சொல்லின் வகை அறிக:

ADVERTISEMENT

‘ கேண்மை ‘

a . குணப்பெயர்

b . இடப்பெயர்

c . காலப்பெயர்

d . சினைப்பெயர்

ADVERTISEMENT

e . விடை தெரியவில்லை

விடை: a

21. பொருத்தம் இல்லாச் சொல்லைத் தேர்வு செய்:

a . Cajole – மருட்டி இசைவி

b . Cajolement – மருட்டி வசப்படுத்துதல்

ADVERTISEMENT

c . Caitiff – இணங்கச் செய்

d . Cajolery – பசப்பதல்

e . விடை தெரியவில்லை

விடை: c

22. இரண்டு உதடுகள் பொருந்துவதனால் பிறக்கும் எழுத்துகள்

ADVERTISEMENT

a . ய் , ர்

b . க் , ங்

C. ல் , ள்

d . ப் , ம்

e . விடை தெரியவில்லை

ADVERTISEMENT

விடை: d

23. இலக்கணக் குறிப்பறிதல்

” நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே ‘ கூற்று A : செய்யுளிசையளபெடை

காரணம் ( R ): ஒரு சீரில் இயல்பாக உள்ள நெட்டெழுத்து அளபெடுத்து, அளபெடைக் குறியை நீக்கினால் செய்யுளில் சீர், தளை கெடும்

a . A சரி . ஆனால் R தவறு

ADVERTISEMENT

b . A மற்றும் R இரண்டும் சரி . மேலும் R என்பது A விற்குச் சரியான விளக்கம்

c . A தவறு , ஆனால் R சரி

d . A மற்றும் R இரண்டும் தவறு

e . விடை தெரியவில்லை

விடை: b

ADVERTISEMENT

24. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: ‘ தமிழக அரசு சிறந்த கலைஞர்களைக் கௌரவிக்கிறது ‘

a . செயப்பாட்டு வாக்கியம்

b . தொடர் வாக்கியம்

c . கலவை வாக்கியம்

d . செய்வினை வாக்கி

ADVERTISEMENT

e . விடை தெரியவில்லை

விடை: d

25. விகுதிப் பெற்றுள்ள தொழிற்பெயரைக் கண்டறிக

a . தொண்டு

b . கூத்து

ADVERTISEMENT

c . நசை

d . ஆட்டம்

e . விடை தெரியவில்லை

விடை: d

26. கொடுக்கப்பட்டுள்ள செய்யுளில் அடிக்கோடிட்ட சொற்களுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் கண்டறிதல்

ADVERTISEMENT

‘ எத்திசையும் புகழ்மணக்க இருந்த

பெருந் தமிழணங்கே ‘

a . உம்மைத்தொகை , வினைத்தொகை

b . முற்றும்மை , பண்புத்தொகை .

c . இழிவு சிறப்பும்மை , உயர்வு சிறப்பும்மை

ADVERTISEMENT

d . வினைத்தொகை , பண்புத்தொகை

e . விடை தெரியவில்லை

விடை: b

27. ஒரு பாடலில் சொல் பிரிவுறாது நின்று பலபொருள் தருவது

a . சிலேடை

ADVERTISEMENT

b . செம்மொழிச் சிலேடை

c . பிரிமொழிச் சிலேடை

d . பிறிது மொழிதல்

e . விடை தெரியவில்லை

விடை: b

ADVERTISEMENT

மேலும் படிக்கTNPSC Group-4 Questions and Answers

28. வாக்கிங் போகும் போது மொபைல் யூஸ் பண்ண வேண்டாம் – சரியாக மொழிபெயர்க்கப்பட்ட வாக்கியத்தைக் கண்டறிக

a . நடைபயிற்சி செய்யும் போது செல்பேசியைப் பயன்படுத்த வேண்டாம்

b . நடைபயிற்சி போகும் போது அலைபேசியைப் பயன்படுத்த வேண்டாம்

c . நடைபயிற்சி போகும் போது தொலைபேசியைப் பயன்படுத்த வேண்டாம்

ADVERTISEMENT

d . நடைபயிற்சியின் போது இணையதளம் பயன்படுத்த வேண்டாம்

e . விடை தெரியவில்லை

விடை: b

29. மரபுப் பிழையற்ற வாக்கியம் எது?

a . மயில் கூவியது ; குயில் குழறியது

ADVERTISEMENT

b . குயில் கூவியது ; மயில் முழங்கியது

c . குயில் கத்தியது ; மயில் அலறியது

d . குயில் கூவியது ; மயில் அகவியது

e . விடை தெரியவில்லை

விடை: d

ADVERTISEMENT

30 . கீழ்க்காணும் ‘ வல்லினம் மிகா இடம் ‘ குறித்த இலக்கணக் கூற்றில் பிழையான கூற்று எது?

a . வினைத்தொகையில் வல்லினம் மிகாது

b . உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது

c . இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது

d . நான்காம் வேற்றுமை விரியில் வரும் வல்லினம் மிகாது

ADVERTISEMENT

e . விடை தெரியவில்லை

விடை: d

31. சந்திப்பிழை இல்லாத தொடரைக் கண்டறிக?

a . திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளி ஒலிப்படக்கருவி பயன்படுகிறது

b . திரைப்படம் மக்களை தன்பால் ஈர்க்கவல்லது

ADVERTISEMENT

C. கயிறு கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்

d . செய்திபடங்கள் வாயிலாக நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே கண்டுகளிக்கலாம்

e . விடை தெரியவில்லை

விடை: a

32. தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க .

ADVERTISEMENT

a . இலக்கியம் – இலக்கு + இயம்

b . செம்மொழி – செம்மை + மொழி

c . தமிழ்நாடு – தமிழ் + நாடு

d . வேரூன்றிய – வேரு + ஊன்றிய

e . விடை தெரியவில்லை

ADVERTISEMENT

விடை: d

33. ஆங்கிலச்சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிக. இந்தச் செஞ்சுரி டென்ஷன் நிறைந்தது

a . இந்த நூற்றாண்டு பரபரப்பானது

b . இந்த ஆண்டு பதற்றம் நிறைந்தது

c . இந்த நூற்றாண்டு மனக்கவலை அளிப்பது

ADVERTISEMENT

d . இந்த நூற்றாண்டு மன அழுத்தம் நிறைந்தது

e . விடை தெரியவில்லை

விடை: d

34. பொருத்தமில்லாத எதிர்ச்சொல்லைக் கண்டுபிடி

a . தேய்ந்து x வளர்ந்து

ADVERTISEMENT

b . குழப்பம் x தெளிவு

c . நண்பர் x செறுநர்

d . கரத்தல் x மறைத்தல்

e . விடை தெரியவில்லை

விடை: d

ADVERTISEMENT

35. கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க:

a . ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு , மலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள்

b . பாம்பாட்டிச் சித்தர் , குதம்பைச் சித்தர் , அழுகுணிச் சித்தர் என்பன எல்லாமே காரணப் பெயர்கள்

c . எளிய சொற்களில் அறிவுரைகளைக் கூறியவர்கள் சித்தர்கள்

d . இரும்பைப் பொன்னாக்கும் இரசவாத வித்தை கற்று உலகில் செல்வராக வாழச் சித்தர்கள் அவாவினர்

ADVERTISEMENT

e . விடை தெரியவில்லை

விடை: d

Leave a Reply

Your email address will not be published.