ADVERTISEMENT

சில எளிதான வெரைட்டி ரைஸ் சமையல்

இல்லத்தரசிகளுக்கு தினமும் மிகப்பெரிய சவாலாக இருப்பது தினமும் என்ன குழம்பு செய்வது என்பது தான். முக்கியமாக அவர்களுக்காகவே இந்த சமையல் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவைகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

காய்கறி சாதம்

தேவையான பொருட்கள்:

அரிசி – 1/2 கிலோ

தக்காளி – மூன்று

பெரிய வெங்காயம் – இரண்டு

பச்சை மிளகாய் – ஆறு

ADVERTISEMENT

இஞ்சி – ஐந்து துண்டு

பூண்டு – பத்து பல்

சின்ன வெங்காயம் – எட்டு

பட்டை – ஒன்று

கேரட் –  நூறு கிராம்

ADVERTISEMENT

பீன்ஸ் – நூறு கிராம்

பட்டாணி – நூறு கிராம்

உருளைக்கிழங்கு – நூறு கிராம்

காலிஃப்ளவர் – நூறு கிராம்

பிரியாணி இலை – ஒன்று

ADVERTISEMENT

ஏலக்காய் – இரண்டு

கிராம்பு – இரண்டு

அன்னாசிப் பூ – இரண்டு

ஜாதிக்காய் – ஒன்று

நெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்

தயிர் – 1/2 கப்

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

சீரகத் தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

மிளகாய் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்

தனியா பொடி – இரண்டு டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

புதினா இலைகள் – சிறிதளவு

ADVERTISEMENT

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

ஃபுட் கலர் – ஒரு டீஸ்பூன்

செய்முறை:

  • இரண்டு அல்லது மூன்று முறை நல்ல தண்ணீரில் நன்கு அரிசியைக் கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பெரிய வெங்காயம், காய்கறி ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின்பு அடுப்பில், பாத்திரத்தை வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். நெய் மற்றும் எண்ணெய் சூடானதும் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, ஜாதிக்காய், சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக தாளிக்கவும்.
  • பின்பு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின்பு தக்காளி, மிளகாய்த்தூள், தனியாதூள், கரம் மசாலா, மிளகுத் தூள், மஞ்சள்தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகள், தேவைக்கேற்ப உப்பு, தயிர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம், மூடி வைக்க வேண்டும்.
  • பின்பு அளவு தண்ணீர், காய்கறிகளை சேர்த்து, பாத்திரத்தை சிறிது நேரம் மூடி காய்கறிகளை வேக விட வேண்டும்.
  • காய்கறி, மசாலாவும் நன்கு கலந்து, எண்ணெய் மேற்பகுதியில் பிரிந்து வர வேண்டும். பின்பு அரிசியை மசாலாவுடன் சேர்க்க வேண்டும்.
  • தேவையான உப்பு, ஃபுட் கலர் சேர்த்து மூடி மிகவும் குறைவான தியில் வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து காய்கறி சாதம் தயாராகிவிடும்.

மேலும் படிக்கசில எளிதான சிக்கன் உணவு வகைகள்

மிளகு சாதம்

தேவையான பொருட்கள்:

அரிசி – ஒரு கிலோ

ADVERTISEMENT

வெங்காயம் – இரண்டு

மிளகுத்தூள் – இரண்டு டீஸ்பூன்

இஞ்சி விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு, உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

சீரகம் – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • அரிசி குழைந்து விடாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில், எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் போட்டு நன்கு பொரிய விட வேண்டும்.
  • பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • தேவையான உப்பு, மிளகுப்பொடியைச் சேர்த்துக் கிளறவும்.
  • கடைசியாக வேக வைத்த சாதத்தை போட்டு கிளறவும்.
  • காரசாரமான மிளகு சாதம் தயார்.

மேலும் படிக்கசில எளிதான மீன் சமையல்

பருப்பு சாதம்

தேவையான பொருட்கள்:

அரிசி – ஒரு கிலோ

ADVERTISEMENT

துவரம் பருப்பு – இருநூறு கிராம்

இஞ்சி – ஐந்து துண்டு

பூண்டு – பத்து பல்

சின்ன வெங்காயம் – எட்டு

தக்காளி – மூன்று

ADVERTISEMENT

பெரிய வெங்காயம் – இரண்டு

பச்சை மிளகாய் – ஏழு

சீரகம் – இரண்டு டீஸ்பூன்

பூண்டு – பத்து பல்

கேரட் – இருநூறு கிராம்

ADVERTISEMENT

பீன்ஸ் – இருநூறு கிராம்

பட்டாணி – நூறு கிராம்

உருளைக்கிழங்கு – இருநூறு கிராம்

காலிஃப்ளவர் – இருநூறு கிராம்

கடுகு, உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

நெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

புதினா இலைகள் – சிறிதளவு

ADVERTISEMENT

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை:

  • இரண்டு அல்லது மூன்று முறை நல்ல தண்ணீரில் நன்கு அரிசியைக் கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • குக்கரில் தண்ணீர் ஊற்றி துவரம் பருப்பு, இஞ்சி, பூண்டு, சீரகம், பச்சை மிளகாய், உப்பு எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து 2 விசில் விட்டு, கடைந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பூண்டு, சீரகம் ஆகியவற்றை லேசாக தட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பெரிய வெங்காயம், காய்கறி ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். நெய் மற்றும் எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக தாளிக்கவும்.
  • பின்பு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் பூண்டு, சீரகம் சேர்த்து தட்டிய விழுதை சேர்த்து வதக்கவும்.
  • பின்பு தக்காளி, மஞ்சள்தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகள், தேவைக்கேற்ப உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம், மூடி வைக்க வேண்டும்.
  • பின்பு காய்கறிகளை சேர்த்து, பாத்திரத்தை சிறிது நேரம் மூடி காய்கறிகளை வேக விட வேண்டும். காய்கறி, மசாலாவும் நன்கு கலந்து, எண்ணெய் மேற்பகுதியில் பிரிந்து வர வேண்டும்.
  • பின்பு கடைந்த பருப்பு, அரிசியை மசாலாவுடன் சேர்க்க வேண்டும்.
  • தேவையான உப்பு, அளவு தண்ணீர் சேர்த்து மூடி, மிகவும் குறைவான தீயில் வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து பருப்பு சாதம் தயாராகிவிடும்.

மேலும் படிக்கசில எளிதான மட்டன் உணவுகள்

குடைமிளகாய் சாதம்

தேவையான பொருட்கள்:

குடைமிளகாய் – இரண்டு

தக்காளி – மூன்று

ADVERTISEMENT

வெங்காயம் – இரண்டு

காய்ந்த மிளகாய் – ஆறு

அரிசி – 1/2 கிலோ

இஞ்சி விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

மிளகாய்த்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

தனியா தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்

கடுகு, உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

முந்திரி – பத்து

செய்முறை:

  • தக்காளி, முந்திரி, சீரகம், காய்ந்த மிளகாயை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு நன்கு பொரிய விட வேண்டும்.
  • பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின்பு நறுக்கிய குடை மிளகாயைச் சேர்க்கவும். குடைமிளகாய் லேசாக வதங்கியதும், அத்துடன் மிளகாய்த்தூள், தனியா தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  • பின்பு அரைத்த தக்காளி, முந்திரி, சீரகம், காய்ந்த மிளகாய் விழுதை அதில் சேர்க்கவும். சற்று கெட்டித்தன்மை அடைந்தவுடன், அரிசி மற்றும் உப்பு சேர்த்து லேசாகக் கிளறவும்.
  • இறுதியாக ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி, ஒரு விசில் விட்டு இறக்கினால், சுவையான குடை மிளகாய் சாதம் தயார்.

மேலும் படிக்கசில எளிதான பலாக்காய் சமையல்

கூட்டாஞ் சோறு

தேவையான பொருட்கள்:

அரிசி – ஒரு கிலோ

ADVERTISEMENT

தக்காளி – மூன்று

பெரிய வெங்காயம் – இரண்டு

புளி – பெரிய நெல்லிக்காய் அளவு

கடுகு, உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – பத்து

ADVERTISEMENT

தேங்காய்த்துருவல் – ஒரு கப்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

மிளகு – ஒரு டீஸ்பூன்

பூண்டு – பத்து பல்

ADVERTISEMENT

வெந்தயம் – ஒரு டீஸ்பூன்

தனியா தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

கருவடம் – தேவைக்கேற்ப

கொத்தமல்லி இலை – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப

ADVERTISEMENT

செய்முறை:

  • கடாயில் எண்ணெய் விட்டு, தக்காளி, தேங்காய்த்துருவல், சோம்பு, சீரகம், மிளகு, பூண்டு, தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  • இந்தக் கலவை நன்கு வதங்கியதும், ஆறவைத்து இதை மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • புளியில் தண்ணீர் ஊற்றி அதை நன்கு கரைத்து, அந்தக் கரைசலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அளவு தண்ணீர் ஊற்றி, அரிசி, நல்லெண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்து வேக விட வேண்டும்.
  • அரிசி பாதி அளவு வெந்ததும், நாம் மிக்ஸியில் அரைத்து வைத்திருந்த கலவை மற்றும் புளி கரைசலை சேர்த்து நன்கு கிளறி, 5 லிருந்து 10 நிமிடம் நன்கு வேக விட வேண்டும்.
  • கடைசியாக கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கருவடம் சேர்த்து தாளித்து அரிசி, மசாலா கலவையுடன் சேர்த்து கிளறி அதையும் ஒரு 10 நிமிடம் வேக விட வேண்டும்.
  • தண்ணீர் நன்கு சுண்டியதும் ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
  • சுவையான கூட்டாஞ் சோறு தயார்.

மேலும் படிக்கசில எளிதான பிரியாணி உணவு வகைகள்

தேங்காய் சாதம்

தேவையான பொருட்கள்

அரிசி – ஒரு கிலோ

தேங்காய்த்துருவல் – ஒரு கப்

கடுகு – ஒரு டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்

முந்திரி – ஐந்து

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

ADVERTISEMENT

செய்முறை:

  • அரிசி குழைந்து விடாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில், எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, முந்திரி போட்டு நன்கு பொரிய விட வேண்டும். சிறிது நேரம் கழித்து உப்பு, தேங்காய் துருவலை போட்டு வதக்க வேண்டும்.
  • கடைசியாக இதில் சாதத்தை சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவு உப்பு, சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
  • மிகவும் சுலபமான தேங்காய் சாதம் தயார்.

மேலும் படிக்கசில எளிதான வடை சமையல்

பிரிஞ்சி சாதம்

தேவையான பொருட்கள்:

அரிசி – 1/2 கிலோ

தக்காளி – மூன்று

பெரிய வெங்காயம் – இரண்டு

பச்சை மிளகாய் – ஆறு

ADVERTISEMENT

இஞ்சி – ஐந்து துண்டு

பூண்டு – பத்து பல்

சின்ன வெங்காயம் – எட்டு

பட்டை – ஒன்று

தேங்காய்த்துருவல் – ஒரு கப்

ADVERTISEMENT

கசகசா – 1/2 டீஸ்பூன்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

கேரட் – நூறு கிராம்

பீன்ஸ் – நூறு கிராம்

பட்டாணி – நூறு கிராம்

ADVERTISEMENT

பிரியாணி இலை – ஒன்று

ஏலக்காய் – இரண்டு

கிராம்பு – இரண்டு

அன்னாசிப் பூ – இரண்டு

ஜாதிக்காய் – ஒன்று

ADVERTISEMENT

நெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்

தயிர் – 1/2 கப்

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

சீரகத் தூள் – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகாய் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்

தனியா பொடி – இரண்டு டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

ADVERTISEMENT

புதினா இலைகள் – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

ஃபுட் கலர் – ஒரு டீஸ்பூன்

செய்முறை:

  • இரண்டு அல்லது மூன்று முறை நல்ல தண்ணீரில் நன்கு அரிசியைக் கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • தேங்காய்த்துருவல், கசகசா, சோம்பு, முந்திரி,சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து, தனியாக பால் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பெரிய வெங்காயம், காய்கறி ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்பு அடுப்பில், பாத்திரத்தை வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
  • நெய் மற்றும் எண்ணெய் சூடானதும் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, ஜாதிக்காய், சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக தாளிக்கவும்.
  • பின்பு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின்பு தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகள், தேவைக்கேற்ப உப்பு, தயிர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம், மூடி வைக்க வேண்டும்.
  • பின்பு காய்கறிகளை சேர்த்து, பாத்திரத்தை சிறிது நேரம் மூடி காய்கறிகளை வேக விட வேண்டும். காய்கறி, மசாலாவும் நன்கு கலந்து, எண்ணெய் மேற்பகுதியில் பிரிந்து வர வேண்டும்.
  • பின்பு அரிசியை மசாலாவுடன் சேர்க்க வேண்டும். பின்பு நாம் அரைத்து வைத்திருந்த தேங்காய்த்துருவல், கசகசா, சோம்பு கலவையில் எடுத்த பால், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக விட வேண்டும்.
  • தேவையான உப்பு, ஃபுட் கலர், அளவு தண்ணீர் சேர்த்து மூடி மிகவும் குறைவான தீயில் வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து பிரிஞ்சி சாதம் தயாராகிவிடும்.

3 comments

Leave a Reply

Your email address will not be published.